2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியா ரீ.பி.ஜாயா வித்தியாலயத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி கட்டிடம்

Kogilavani   / 2014 மார்ச் 06 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ் ஷாபி

கிண்ணியா ரீ.பி.ஜாயா வித்தியாலயத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நிதி வழங்கும் என இலங்கைகான பாகிஸ்தான் உயர்ஸ்த்தானிகர் மேஜர் ஜென்ரல் காஸிம் குறைசி உறுதியளித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்; தெரிவித்தார்.

பாகிஸ்தான் தூதுவராலயத்தில்; உயர்ஸ்த்தானிகரை  புதன்கிழமை (5) சந்தித்து கிண்ணியா ஜாயா வித்தியாலத்தில் நீண்ட காலமாக நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு விடுத்த வேண்டுகோளை உயர்ஸ்தானிகர் ஏற்றுக் கொண்டமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பாகிஸ்தான் தூதுவராலய கவுன்ஸிளர் முகமட் சித்தீக்கும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .