2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மூவரின் உறுப்புரிமையை இரத்துசெய்யுமாறு அறிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  தயாகமகே (ஐ.தே.கட்சி), ஜெமில் (முஸ்லிம் காங்கிரஸ்), பிரியந்த பத்திரன (சி.சு.கட்சி) ஆகிய மூன்று உறுப்பினர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக கிழக்கு மாகாண சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் இம்மூன்று உறுப்பினர்களின் மாகாண சபை உறுப்பினர்  பதவிகள் இரத்துசெய்யுமாறு அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை சபையில் விசேட அறிக்கை ஒன்றை சம்பர்பித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் தலைவி திருமதி ஆரியவதி கலப்பதி தலைமையில் கிழக்கு மாகாண சபையின் கூட்டம் கடந்த 18 திகதி நடைபெற்றபோது கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி சார்பிலேயே இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான  தயாகமகே, ஏ.எம்.ஜெமில், மு.பிரியந்த பிரேமகுமார ஆகியோர் கடைசியாக சபைக் கூட்டத்திற்கு வருகை தந்து தங்களின் வரவைப் பதிவு செய்த தினங்களில் இருந்து 90 நாட்கள் கடந்த நிலையில் அதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சபையின் எந்தவொரு கூட்டத்திற்கும் சமூகம் அழிக்காமல்; இருப்பதாகவும் அத்துடன் அவர்கள் மூவரும் வராமைக்காக சபையின் முன் அனுமதி எதனையும் பெற்றிருக்கவில்லை என கிழக்கு மாகாண சபை தவிசாளர் அறிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபை சட்டத்தின் பிரிவு (2) உடன் கிழக்கு மாகாண சபையின் செயன்முறை விதிக்கோவை பந்தி (65) இனை சேர்த்து வாசிக்கப்படுவதன் பிரகாரம் இம் மூன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் வறிதாக்கப்படுவதான ஒரு பிரகடனத்தை கிழக்கு மாகாண சபையின் தவிசாளரின் பிரதிநிதியாக இச்சபைக்கு சமர்பிக்கின்றேன்.

இருப்பினும் நிதிக் கோட்பாட்டின் அடிப்படையில் இவ்வாறான பிரகடனம் ஒன்றை ஏன் நிறைவேற்றக்க கூடாது என்ற நிலமை உருவாகி உள்ளதாலும், இம் மூன்று உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருக்கு 2014.03.8 ம் திகதிய கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள விளக்கங்களில் வலிதான காரணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே,  கிழக்கு மாகாண சபை இது தொடர்பான ஒரு பிரகடனத்தை குறித்த சட்ட ஏற்பாடுகளின் (29) பிரிவின் பிரகாரம் நிறைவேற்ற இச்சபைக்கு முன்மொழிகின்றேன். இம் மூன்று உறுப்பினர்களின் வறிதாக்கப்பட்ட உறுப்புரிமை தொடர்பாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இம் மூன்று உறுப்பினர்களும் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களாக செயல்படுவதற்கு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இம் மூன்று மாகாண சபை உறுப்பினரகள் தொடர்ச்சியாக 90 நாட்கள் கிழக்கு மாகாணசபை கூடடங்களில் சமுககமளிக்காது  தொடர்பான விளக்கம் கேட்டு கிழக்கு மாகாணசபையினால் அனுப்பபட்ட கடிதங்களுக்கு நியாமான காரணங்கள் தெரிவித்து விளக்க கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.            

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .