2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் இலங்கை மாணவி

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிண்ணியாவைச் சேர்ந்த மாணவி தௌபீக் றிப்கா ஜெஸ்மின் தெரிவாகியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஒப் ஹெல்த் சயின்ஸ் (IIHS) கல்வி நிறுவனத்தில் இயல் மருத்துவத்துறை (Physiotherapy) இறுதியாண்டு மாணவியான றிப்கா ஜெஸ்மின் மருத்துவ ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடுடையவர்.

இலங்கையின் கிழக்குமாகாண பாடசாலை மாணவர்களிடையே பரவலாக தொற்றலடையும் பொதுவான வியாதியான மேல் சுவாசப்பாதை நோய்த்தொற்று (URTI) சம்பந்தமாக, கிண்ணியாவின் இரண்டு பிரதான பாடசாலை மாணவர்களிடம் நடாத்திய ஆய்வறிக்கையே இம்மாணவியை சர்வதேச ஆராய்ச்சியாளர் மாநாட்டிற்கு தெரிவுசெய்ய காரணமாக அமைந்ததாக மருத்துவ ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு (ISCMR) தெரிவித்துள்ளது.

இவ்வருடம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து தெரிவாகிய ஒரே ஒரு மாணவி இவராவார். இம்மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்வரும் மே மாதம் இவர் அமெரிக்கா பயணமாகவுள்ளார்.

கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி, திருமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியான றிப்கா ஜெஸ்மின், முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக் மற்றும் ஹஸீனா தம்பதிகளின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .