2025 ஜூன் 25, புதன்கிழமை

பங்கேற்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு பயிற்சிகள்

Gavitha   / 2014 ஜூலை 26 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'உள்ளூராட்சி மன்ற நடவடிக்கைகளில் மக்களின் பங்கேற்பையும் பங்குபற்றுதல்களையும் வலியுறுத்தும் முகமாக விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன' என்று குச்சவெளிப் பிரதேச சபையின் சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரும் வளவியலாளருமான வசந்தி ஜெயராஜா தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட சர்வோதய பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற பயிற்சி நெறியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சியின் விஷேடத்துவம், பங்கேற்பின் அவசியம், சட்டமும் ஒழுங்கும், வினைத்திறனும் விளைதிறனும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல், சமத்துவம், அனைவரையும் உள்வாங்கும் தன்மை, மக்கள் பங்கேற்பிற்கான தடைகள் போன்ற விடயதானங்களில் பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்களில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் தொடர்பாக ஏற்படும் வன்முறைகளுக்கு சுமூகத் தீர்வு கண்டு வன்முறைகளைக் குறைப்பதற்கு ஏற்ற வகையிலமைந்த, பெண்கள் விழி;ப்புக் குழு பற்றிய விடயமும் பயிற்சி நெறியில் விஷேடமாக பயிற்சிவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மற்றும் சர்வோதய பங்காளர்கள் உள்ளிட்ட 24 பங்குபற்றுநர்கள் இந்த பயிற்சி நெறியில் கலந்து கொண்டார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .