2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடிப்போம்'

Gavitha   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடிப்போம் என்ற தொனிப் பொருளில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சனிக்கிழமை (13) கிண்ணியா பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ராஜபக்ஷவின் பதவிப் பேராசை காரணமாக நடாத்தும் ஓர் தேர்தலாகும். இத்தேர்தல் சட்டவிரோதமானதோடு பிரசார நடவடிக்கைகளும் தேர்தல் சட்டங்களை முற்றாக முறியடித்துள்ளன.

ஜனாதிபதி  கடந்த காலம் முழுவதும் தமது குடும்ப ஆட்சியைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் மக்கள் பணத்தை தமக்கு ஒதுக்கிக் கொள்வதற்குமே செயற்பட்டிருக்கிறார். உற்பத்தித்துறை முற்றாக புறக்கணிக்கப்டடிருக்கிறது. இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை.

விலைவாசி உயர்வு போன்றவற்றோடு நாட்டை பெறும் கடன் பொறியில் சிக்கவைத்துள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சியைத் தோற்கடிக்க வேண்டியிருக்கிறது. மக்களது உரிமைகளை வென்றெடுக்கும் சிறப்பானதோர் சமுதாயத்தை நிர்மாணிக்கும் பணி இத்தேர்தல் முடிவுகளோடு நிறைவடையாது. அதற்காக முன்னோக்கிச் செல்லும் பாரிய மக்கள் அணிதிரள்வு தேவைப்படுகின்றது என்று அந்த பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .