2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பயிற்சி நிறைவடைந்து வெளியேறும் வைபவம்

Thipaan   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா தேசிய இளைஞர் படையணி பயிற்சி முகாமில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்ட  25 பேர் வெளியேறும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.

இதன்போது இவ்வாண்டு கிண்ணியா சார்பாக தேசிய ரீதியில் பாடல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரீ.ஜே.அனூசியா, தேசிய ரீதியில் ஓர்கன்  போட்டியில் முதலாம்  இடத்தைப் பெற்ற எம்.எஸ்.நுஸ்ரத் ஆகியோர் கேடயம் வழங்கி கெரவிக்கப்பட்டனர்.

அத்தோடு இந்தப் பயிற்சி படையணியில் இருந்து ஆர்.றிஹானா, எம்.என்.எம்.சிப்கான் ஆகியோர் சிறப்பு நாயகர்களாகத் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இவ் வைபவத்தில் தேசிய இளைஞர் படையணியின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் லெப்டினன் கேர்ணல் ஏ.எச்.லியனகே, கிண்ணியா தேசிய இளைஞர் படையணி பயிற்சி முகாம் பொறுப்பதிகாரி ஏ.எச்.புஸ்பகுமார, கிண்ணியா வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.சமீம் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரணசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .