2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐந்து வருடங்களின் பின் கருமலையூற்று பள்ளிவாசலில் தொழுகை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை மாவட்டத்தின் கருமலையூற்று ஜும்மா பள்ளிவாசலில் ஐந்து வருடங்களின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடைபெற்றது.

கடந்த ஐந்து வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த இந்தப் பள்ளிவாசல்  அதன் நிர்வாகத்தினரிடம், படையினரால்  08.12.2014 அன்று ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இந்தப் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றது.

பிரதேச முஸ்லிம்களும் அயல் கிராம முஸ்லிம்களுமாக 300 பேருக்கும் மேற்பட்டோர்  இந்தத் தொழுகையில் கலந்துகொண்டனர்.

கிண்ணியா ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹிதாயதுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த  ஜும்மா தொழுகையில் கருமலையூற்று ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளான அதன் தலைவர் எம்.எச்.அப்துல் கரீம், உபதலைவர்  ஏ.ஏ.எம்.றமீஸ், செயலாளர் எம்.ஐ.சுபைர், திருகோணமலை பட்டினமும்சூழலும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.பஷீர், கிண்ணியா நகரசபை தலைவர் வைத்தியர் எம்.ஹில்மி, சுமையா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் எம்.ரீ.மஹ்மூத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜும்மா பிரசங்கத்தை நிகழ்த்திய கிண்ணியா ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹிதாயதுல்லாஹ், 'இந்தப் பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை இடம்பெறுவதற்கும் பள்ளிவாசலை சிறப்பான முறையில் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கும்  கருமலையூற்று பள்ளிவாசலைச் சூழ வாழ்ந்து இப்பொழுது வேறிடங்களில் வெளியேற்றப்பட்டிருக்கும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். இதற்காகாக சகலரும் பேதங்களை மறந்து முயற்சிக்க வேண்டும்' என்றார். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .