Kanagaraj / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்
திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாரக்குடா கடலில் படகு மூழ்கியதால், காணாமல்; போன மீனவரான கேணிக்காட்டைச் சேர்ந்த ஹுஸைன்தீன் முஹம்மது பாஹில் (வயது 34) என்பவரின் சடலம் திங்கட்கிழமை (22) காலை சூடாக்குடா கடற்கரையில் மீட்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் மீன்பிடிப்பதற்கு விடப்பட்டிருந்த வலையை மீண்டும் எடுப்பதற்கு சனிக்கிழமை (20) இவர் சென்றதாகவும் இதன்போது, இவரது படகு கடலில் மூழ்கியதுடன், இந்த மீனவரும் காணாமல் போனார். இந்த நிலையிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார்.
16 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
9 hours ago
9 hours ago