2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வெள்ளம் காரணமாக கிண்ணியா பிரதேசம் பாதிப்பு

Kogilavani   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


கிண்ணியா பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற வெள்ளத்தினால் அதிகமான பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு, காலை உணவுகளையும் கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா சபை வழங்கி வருகின்றது.

'பூவரசந்தீவு, சமாவச்சதீவு, நெடுந்தீவு, பொண்ணவரந்தீவு போன்ற பல குடியிருப்புப் பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

அப்பகுதி மக்கள் பாடசாலைகளிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். அவர்களுக்கான போக்குவரத்து பாதைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கான போக்குவரத்து கடற்படையினரின் இயந்திர படகுகள் மூலமும், கிராம மக்களின் வள்ளங்கள் மூலமும் இடம்பெற்று வருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .