2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மூதூர்- கிண்ணியா வீதியை படகு மூலம் கடப்பதற்கு இராணுத்தினர் அனுமதி மறுப்பு

Kogilavani   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முறாசில்
, அப்துல் பரீட்

வெள்ளநீர் பாய்ந்து செல்லும்  மூதூர்- கிண்ணியா வீதியை படகு மூலம் கடப்பதற்கு இராணுத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று காலை 10.00 மணியளவில்இராணுவத்துக்கும் பயணிகளுக்குமிடையில் சிறு முறுகல் ஏற்பட்டது.

மூதூர்- கந்தளாய் வீதி வெள்ளப்பெருக்கினால் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில்  மூதூர் – கிண்ணியா வீதியில் வெள்ள நீர் பாய்ந்து செல்லும் பகுதியை மக்கள் படகு மூலம் கடந்து வந்தனர்.

திடீரென படகு மூலம் பயணிப்பதை இராணுவத்தினர் திங்கட்கிழமை(29) தடைசெய்தனர். இதன்போதே பயணிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள  மூதூர் பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் இராணுவத்தினரால்  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேசத்தில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இடம்பெறும் கூட்டத்துக்கு மக்கள் செல்வதைத் தடுப்பதற்காகவே  இராணுவத்தினர் படகு சேவையை தடைசெய்துள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன்போது செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .