2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புதிதாக அமைக்கப்பட்ட சபா மண்டபத்தில் நகரசபை அமர்வு

Thipaan   / 2015 ஜனவரி 21 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை நகர சபையில் புதிதாக அமைக்கப்பட்ட நகரசபையின் சபா மண்டபத்தில் 2015ஆம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வு இன்று புதன்கிழமை(21)  காலை ஆரம்பமானது.


திருகோணமலை நகர சபையின் தலைவர் க. செல்வராஜா தலைமையில் நடைபெற்ற அமர்வில், சபை உறுப்பினர்கள் 10 பேரும்  செயலாளர் உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் நகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள், பார்வையாளர் பலர் கலந்து கொண்டனர்.


இந்த அமர்வில் ஒவ்வொரு பிரதிநிதிகளும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களின் பிரச்சினைகளை  தலைவரால் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தினுள் முன்வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .