2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய எழுவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கன்னியா கிளிக்குஞ்சுமலை பிரதேசத்திலுள்ள வளவு ஒன்றில் புதையல் தோண்ட முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7பேரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் இ.திருக்குமாரநாதன் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள்,  திருகோணமலை பதில் நீதவான் இ.திருக்குமாரநாதன் முன்நிலையில் சனிக்கிழமை(31) ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .