2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நகரசபை தலைவரின் கொடும்பாவி எரிப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை நகரசபை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியும் கொடும்பாவி எரிப்பும் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் முன் இன்று புதன்கிழமை (22) இடம் பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற தொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு,  இன்று காலை 10 மணியளவில் திருகோணமலை மின்சார நிலைய வீதயில் அமைந்துள்ள நகரசபை வேலைப்பகுதியின் அலுவலகத்தின் முன் இருந்து இவ் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது.

இப் பேரணி, திருஞானசம்பந்தர் வீதி வழியாக சிவன் கோயிலடி ஊடாக உட்துறைமுக வீதியில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் முன் அடைந்து,  அங்கு வைத்து நகரசபை தலைவர் க.செல்வராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த தொழிற்சங்க தலைவர் எஸ்.கண்ணன்,

திருகோணமலை நகரம் பெரியது இங்கு சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்ற ஆளணி பற்றாக்குறை என கோரி, மாகாண சபையில் பெற்ற தொழிலாளர் நியமனத்தை தனது உறவினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வழங்கிய திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா,  அவர்களை அலுவலகம் மற்றும் நூலகத்துக்கு அலுவலக பணியாளராக கடமை புரிய வைத்திருந்தார்.

இதன் மூலம் தற்போது கடமையாற்றி வரும் தொழிலாளர்களுக்கு மேலும் பணி சுமை அதிகரிக்கின்றது.

மேலும் 25 வருடங்களுக்கு மேல் தொழிலாளர்களாக கடமையாற்றியவர்களுக்கு வழங்க வேண்டிய மேற்பார்வையாளர் பதவி உயர்வை தமது ஆதரவாளர்களுக்கு தமது அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கியுள்ளார்.

இவருடைய சகல விடயங்களுக்கும் துணை போகிறார் நகரசபை செயலாளர் ஏ.எல்.எம்.நபீல், எனவே இவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.

மேலும், தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. போன்ற பல குற்றச்சாட்டுகளை வைத்து தமக்கு நியாயமான தீர்வு வேண்டும் என கோரி ஆளுனர் அலுவலகத்தின் முன் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

நீண்டகாலமாக தொழிலாளர் நலன் தொடர்பான பல பிரச்சினைகளை நகரசபை மற்றும் கிழக்கு மாகாணசபை மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எமக்கு கிடைக்கப்படவில்லை எனவே, இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில், வடக்கு, கிழக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் சங்கமும் இணைந்திருந்ததுடன் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .