2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மூதூர் தள வைத்தியசாலை போராட்டம் கைவிடப்பட்டது

Princiya Dixci   / 2015 ஜூன் 11 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், எஸ்.சசிக்குமார்

மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, கடந்த  10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், நேற்று புதன்கிழமை (10) கைவிடப்பட்டது. 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளின் பேரில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு நேற்று மாலை 6.30 மணிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹ்மட் கொடுத்த வாகுறுதியை அடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .