2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மூதூர் வைத்தியசாலையின் குறைகளை நிறைவேற்றக் கோரி பிரேரணை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 12 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

மூதூர் தள வைத்தியசாலையில் நீண்டகாலமாகவுள்ள ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி, எதிர்வரும் 16 அல்லது 17ஆம் திகதியில்  கிழக்கு மாகாணசபையில் தனிநபர் பிரேரணையொன்றை  முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று வெள்ளிக்கிழமை  தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகளையும் பிரச்சினைகளையம் தீர்த்துவைக்குமாறு கோரி  பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  இந்த வைத்தியசாலையின் குறைபாடுகளை மத்திய, மாகாண அரசாங்கங்கள் ஒன்றிணைந்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கிழக்கு மாகாணசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .