Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 23 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலை மாவட்டத்துக்காக காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு, எதிர்வரும் சனிக்கிழமை (27) தொடக்கம் செவ்வாய்க்கிழமை (30) வரை இடம்பெறவுள்ளது என ஆணைக்குழுவின் நிர்வாக உத்தியோகஸ்தர் எச்.டபிள்யூ. குணதாஸ தெரிவித்தார்.
ஆணைக்குழு, குறித்த தினங்களில் காலை 09 மணியிலிருந்து மாலை 05 மணி வரை சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளது.
முதல் இரு தினங்களான சனிக்கிழமை 157 பேரும் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 169 பேரும் மூதூர் பிரதேச செயலகத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி குறித்த இரு தினங்களும் மூதூர், சேருவில, ஈச்சிலம்பற்று, கிண்ணியா மற்றும் தம்பலகாமம் ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 326 பேர் சாட்சியமளிப்பதற்கென அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான சாட்சியமளிப்புத் திகதி தொடர்பான கடிதங்கள், ஆணைக்குழுவினால் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
29ஆம் திகதி திங்கட்கிழமை 181 பேரும் விசாரணை இறுதித் தினமான 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 170 பேரும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர் பற்றிய சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளனர்.
இதற்கென பதவிசிறிபுர, கோமரங்கடவெல, குச்சவெளி, கந்தளாய் மற்றும் மொறவௌ ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ளவர்கள் சாட்சியமளிப்பதற்கென அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தமது உறவுகள் காணாமல் போனது தொடர்பில் விண்ணப்பிக்காதோர் விசாரணை நடைபெறும் அனைத்து தினங்களிலும் புதிதாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் முன்னதாக இயங்கிவரும் இந்தக் குழுவில் நீதியமைச்சின் சட்ட வரைஞர் திணைக்கள முன்னாள் பிரதி சட்ட வரைஞரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளருமான மனோகரி ராமநாதன், குடிசன மதிப்பீட்டு புள்ளிவிவரத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் ரீ.வி. பிரியந்தி சுரஞ்சனா வித்யாரெத்ன ஆகியோரடங்கிய குழுவினர் காணாமல்போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வழமையான தமது விசாரணையில் நாளொன்றுக்கு 60 பேரின் விசாரணை மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால், இம்முறை நாளொன்றுக்கு 120 பேர் என்ற அடிப்படையில் விசாரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு கூறுகின்றது.
அதற்கேற்றபடி ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ. திலகரத்ன ரத்னாயக்க மற்றும் அமைச்சுக்களின் ஓய்வு பெற்ற செயலாளர் ஹேவாஹெற்றிகே சுமணபால ஆகிய இரு அங்கத்தவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டவர்கள் குறித்த தினங்களில் உரிய இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago