2025 ஜூன் 12, வியாழக்கிழமை

கொம்பு முறிப்பு விளையாட்டு

Princiya Dixci   / 2015 ஜூன் 30 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், ஒலுமுதீன் கியாஸ் 

மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள பள்ளிக்குடியிருப்பு கிராமத்தில் கொம்பு முறிப்பு விளையாட்டு, இன்று செவ்வாய்க்கிழமை (30) கோலாகலமாக நடத்தப்பட்டது.

சிவசக்தி அம்மன் கொம்ப முறி விளையாட்டுச் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. 

கண்ணகியை குளிர வைப்பதற்காக அம்மன் விளையாட்டாக கருதப்படும் இவ்விளையாட்டு திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தில் 5 வருடங்களுக்கு ஒரு தடவை நிகழ்த்தப்படுகின்றது. கிழக்கிலங்கையில் திருக்கோயில், காரைதீவு, மண்டூர், சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. 

ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் என்பவற்றை வளர்ப்பதே கொம்பு முறிப்பு விளையாட்டின் நோக்கமாகும்.  

கொம்பு முறி விளையாட்டு என்பது பள்ளிக்குடியிருப்பு பிரதேச மக்கள் வடதிசை, தென்திசை என இரண்டு திசைகளை வைத்து பிரிக்கப்படுவர். இதன்போது மாட்டுக் கொம்பின் வடிவில் மரத்தில் செய்யப்பட்ட கொம்பு ஒன்று மரமொன்றில் கட்டப்பட்டிருக்கும். இந்த கொம்பின் இரண்டு பக்கமும் இருந்து பக்தர்கள் கயிற்றினை இழுக்கும் வகையில் மிக நீளமான கயிறு கட்டப்பட்டிருக்கும்.

இரு திசைகளாக பிரிக்கப்பட்டவர்கள் அவர்களது திசையிலிருந்து கயிற்றினை இழுப்பர். இதன்போது கொம்பு அங்கும் இங்கும் சென்று முதலில் வடதிசை பகுதியினர் கயிறு இழுத்தலில் வெற்றி பெறுவர். தென்திசை பகுதியினர் மறைமுகமாக வட பகுதியனருக்கு விட்டுக் கொடுப்பர். இது ஒரு சம்பிரதாய விடயமாகும். 

வெற்றி பெற்ற வட திசை பகுதியினர் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். தென் பகுதியினரான நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள் எங்களை வெற்றி பெற யாரும் இல்லையா என தென் திசை பகுதியினருடன் பகிடியாக பேசுவர். 

பின்னர் இரண்டாவது முiறாயாக கொம்பில் கட்டிய கயிற்றினை இரு பகுதியினரும் தங்கள் தங்கள் பக்கம் இழுப்பர். இதில் தென் பகுதியினர் வெற்றி பெறுபர். இதற்கு வட பகுதியினர் மறைமுகமாக தென்திசை பகுதியினருக்கு விட்டுக் கொடுப்பர். 

இரண்டாவது முறை வெற்றி பெற்ற தென் பகுதியினர் வட திசையினரை நோக்கி நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று பகிடி பண்ணுவர். இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் பகிடிப்பண்ணிக் கொண்டிருக்கும் போது சுமுக நிலை தோன்றும். 

பின்னர் இரு பகுதியினரும் ஒன்றுபட்டு இந்த வெற்றி தங்கள் இரு பகுதியினருக்கும் என வாழ்த்துரைப்பர். இதனை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று, பக்தர்களுக்கு விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும்.

இந்த விளையாட்டு, நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்று அதன் பிற்பாடு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 21

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 23

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13