2025 ஜூன் 12, வியாழக்கிழமை

வேலைக்கு சென்ற குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கொழும்புக்கு வேலைக்கு சென்ற தனது தந்தையை கடந்த 14 தினங்களாக காணவில்லை என்று சேருவில பொலிஸ் நிலையத்தில் அவரது மகன் நேற்று செவ்வாய்க்கிழமை  முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த சூரநகரில் வசிக்கும்  கந்தவனம் நவரெட்ணம் (வயது 59) என்பவரே காணாமல் போயுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி சூரநகரிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வேலை நிமித்தம் இவர்  சென்றுள்ளார்.
இவரை வேலைக்காக அழைத்துச் சென்ற நபர்,  கொழும்புக் கோட்டையிலுள்ள இடமொன்றில் மலசலகூடங்களை துப்புரவு செய்யும் வேலையை பெற்றுக்கொடுத்துள்ளார். இவ்வாறிருக்கும்போது,  கடந்த 18ஆம் திகதியிலிருந்து இவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக அவரிடம் 600 ரூபாய் இருந்துள்ளது. அந்தப் பணம் அவர் சூரநகரிலிருந்து கொழும்புக்கு சென்றபோது எடுத்துச்சென்றதாகும் எனவும் அந்தப் பணத்தை அவர் திருடியுள்ளதாக கூறி அவரது முதலாளி அவரிடம் முரண்பட்டதாகவும் அதன் பிறகே தனது தந்தை காணாமல் போனதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 21

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 23

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13