Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார், எப்.முபாரக், அமதோரு அமரஜீவா,ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட சுகாதாரத் தொழிலாளர் நியமனத்தில் முறைகேடு இருப்பதாகக் கூறி சுகாதாரத் தொண்டர்கள் கிழக்கு மாகாணசபையின் முன்பாக புதன்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்றாம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார சிற்றூழியர் நியனத்தின்போது நீண்டகாலமாக தொண்டர்களாக கடமையாற்றிவந்த எமக்கு முன்னுரிமை வழங்காமல், கோட்டா மற்றும் சிபாரிசுகள் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தொண்டர்கள்; தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கருணாகரனிடம் கேட்டபோது, 'கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமையவே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 307 சிற்றூழியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நியமனம் தகுதி அடிப்டையில் நேர்முகப்பரீட்சையில் தோற்றியவர்களில் தகுதியானவர்களுக்கு மாவட்டங்களின் இன விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.
'மேலும், 2008ஆம் ஆண்டு முன்னாள் ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றுபவர்களை உடனடியாக நிறுத்துமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய அவர்கள் நிறுத்தப்பட்டனர். அதற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்கள் நியமிக்கப்படவும் இல்லை பணியாற்றவும் இல்லை. எனவே, இவர்கள் விடயத்தில் தற்போது வழங்கப்பட்ட நியமனத்தில் எவ்வித விசேட ஏற்பாடுகளும் இருக்கவில்லை.
2008 இற்கு முன்னர் பணியாற்றியவர்களில் சிலர் 45 வயதை தாண்டியவர்களும் கல்வித்தகைமை குறைந்தவர்களுமாக உள்ளனர்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
56 minute ago