2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

காட்டுக்கு தீ வைத்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 14 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                         

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா பகுதியிலுள்ள வயல்வெளியை அண்டிய காட்டுப்பகுதிக்கு தீ மூட்டியதாகக் கூறப்படும் இருவரை திங்கட்கிழமை (13) மாலை கைதுசெய்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பத்து ஏக்கருக்கும் கூடுதலான பகுதி தீயில் எரிந்துள்ளதாக   உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பிரதேச விவசாயிகள் முறைப்பாடு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சந்தேக நபர்கள்  கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய பொலிஸார்,  இவர்களை இன்று செவ்வாய்க்கிழமை(14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .