Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 19 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்,வடமலை ராஜ்குமார்
மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மூதூரில் சேப் ரெஸ்ற் விடுதியில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதி தலைவர் க.துரைரெட்ணசிங்கம், மூதூர் கிளை தலைவர் க.திருச்செல்வம், செயலாளர் க.கனகசிங்கம், திருகோணமலை தலைவர் கோ.சத்தியசீலராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தன் மற்றும் பிரமுகர்கள் இதில் பங்கெடுத்தனர்.
அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பிரமுகர்கள் அங்கு கருத்து தெரிவிக்கையில், 'மூதூர் பிரதேசத்திற்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அமரர் தங்கத்துரையுடன் நிறைவடைந்துவிட்டது. 2004ஆம் வருடம் தௌபீக் நாடாளுமன்ற பிரதிநிதியாக தெரிவானார். அதன் பின்னர் யாரும் தெரிவாக இல்லை. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மூதூர் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் எம்மை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது. எமக்கு இப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும். நாங்கள் உங்கள் கட்சிக்கு வாக்களித்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தருகின்றோம். எமக்கு தேசிய பட்டியல் மூலம் ஒரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அங்கு கருத்து தெரிவிக்கையில், 'முஸ்லிம் மக்களை தனித்துவிட்டு எதையும் சாதிக் முடியாது. இணைந்து செயலாற்றுவதன் மூலம் சாதித்துக்கொள்ள முடியும். இதனை உணர்ந்து கொண்டுள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago