2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

22 வருமான வரி மேற்பார்வையாளர்கள் நியமனம்

Super User   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத், எஸ்.சசிக்குமார்


கிழக்கு மாகாண சபையினால் புதிதாக 22 வருமான வரி மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில்  உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு  நேற்று புதன்கிழமை மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதினால் இந்த நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர் ஏ.அசீஸ் மற்றும் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் க.உதயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .