2025 ஜூன் 26, வியாழக்கிழமை

332 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Kogilavani   / 2014 ஜனவரி 16 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிழக்கு மாகாணத்தில்லுள்ள பாடசாலைகளில் வெற்றிடமாக காணப்படும் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி பாடங்களுக்கான தமிழ், சிங்கள, மொழி மூல 332 பட்டதாரிகளுக்கு புதன்கிழமை (15) ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

திருகோணமலை ஓசில் விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் எ மஜீத், கிழக்கு மாகாண தவிசாளர் ஆர்யவதி கலப்பதி, மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.புஷ்பகுமார ஆகியோர் நிமயனக் கடிதங்களை ஆசிரியர்களுக்கு வழங்கி வைத்தனர்.

இதில் தமில் மொழி மூலம் மொத்தமாக 240 ஆசிரியர்களுக்கும் சிங்கள மொழிமூலம் 92 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.

தமிழ் மொழிமூலம் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளில் 81 பட்டதாரிகள் திருகோணமலை மாவட்டத்திற்கும், 105 பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 54 பட்டதாரிகள் அம்பாறை மாவட்டத்திற்குமாக நியமனம் பெற்றுள்ளனர்.

சிங்கள மொழிமூல பட்டதாரிகள் 92 பேருக்கும் திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை 3 இற்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.




You May Also Like

  Comments - 0

  • Arsath Wednesday, 22 January 2014 06:47 AM

    ஆஹா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .