2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

5 மாணவர்கள் கொலை வழக்கு; 12 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 18 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். சசிகுமார்

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகளின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்களை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறுறே நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர் படுத்தப்பட்டபோதே நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை  இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

உதவி பொலிஸ் அதிகாரி உட்பட 11 பொலிஸ் விசேட அதிரடிப்படையினருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த மாணவர் ஒருவருமே 2006 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

திருமலையில் 5 மாணவர்கள் கொலை; 12 பொலிஸார் கைது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .