2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

67 பேர் திருமலையில் கைது

Editorial   / 2022 மே 24 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக் 

திருகோணமலை, சாம்பல்தீவு சல்லி பிரதேசத்திலிருந்து வெளிநாடொன்றுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 67 பேர் நேற்றிரவு (23) கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

எந்த நாட்டுக்கு இவர்கள் செல்ல முயற்சித்தனர் என்று தகவல்கள் வெளியாகவில்லை, கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்கள், 3 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவர்கள், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில்  இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தின்போது குறித்த பயணத்துக்காக பயன்படுத்தப்பட்ட 3 ஓட்டோ, ஒரு கெப் வாகனம், வானொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொருளாதார சுமை காரணமாக ஏற்கெனவே, இலங்கையின் வடக்கில் இருந்து பலர் இந்தியாவுக்கு கடல் வழியாக சட்டவிரோமாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .