2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

அதிசொகுசு பஸ் வீதியை விட்டு விலகி விபத்து

Janu   / 2024 ஜூலை 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை ,தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 96 ம் கட்டை முள்ளிப்பொத்தானை பகுதியில் வைத்து கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பஸ் ஒன்று புதன்கிழமை (10) அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் சாரதி,நடத்துனர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது .

சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவந்துள்ளது . மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .