2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மாடுகளைக் கொண்டு சென்ற நபர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி இரண்டு மாடுகளைக் கொண்டு சென்ற நபரொருவரை, நேற்று வெள்ளிக்கிழமை (17) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புல்மோட்டை 01ம் வட்டாரத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .