2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அறநெறிப் பாடசாலையின் 28ஆவது வருட நிறைவு

பொன் ஆனந்தம்   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் 28ஆவது வருட நிறைவையொட்டிய பாராட்டு நிகழ்வு, மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் சின்னக்கிளி சந்துரு தலமையில், மூதூர் நவரெட்ணம் மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மேற்படி அறநெறிப் பாடசாலையின் ஸ்தாபகர்களில் ஒருவரான பொ.சற்சிவானந்தம், அறநெறிப்பாடசாலை ஸ்தாபக பொறுப்பாளர் திருமதி ச.சந்திரலீலா ஆகியோர் பிரதம விருந்தினரர்களாகக் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக, அறநெறிப்பாடசாலையின் பழைய மாணவர்களான திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் கணேஸ் வசந்தராஜா, திருகோணமலை நகரசபை உறுப்பினர் தில்லைநாதன் பவித்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .