2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

திருகோணமலை, அபேயபுர சிங்கள ஆரம்பப் பிரிவு பாடசாலையில் காணப்படும்; ஆசிரியர்களுக்கான  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அபேயபுர சுற்றுவட்டத்தில் பெற்றோர் இன்று (20) காலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 308 மாணவர்கள் கல்வி கற்றுவரும் இப்பாடசாலைக்கு 8 ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது 4 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளனர். எனவே, 4 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் கண்டி -திருகோணமலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதுடன், வாகன நெரிசலும் ஏற்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .