Editorial / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்
2020ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் தலைமையில் இன்று (01) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடமையற்றும் அனைத்து உத்தியோகத்தர்ககளும் இந்நிகழ்வில் செய்துகொண்டனர்.
சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து, ஆளுநரால் புது வருட வாழ்த்துகள் தெரிவித்து, பொறுப்புகள் தொடர்பாக ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை, ஞாபகார்த்தமாக மரக்கன்று ஒன்றையும் ஆளுநர் நாட்டினார்.
இதேபோன்று, மாகாணத்திலுள்ள பல அரச நிறுவனங்களில் பொறுப்புகளையும் , கடமைகளையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றன.

6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago