2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை, புல்மோட்டை கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரையும், இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.அன்பார் உத்தரவிட்டார்.

சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள், இந்தியா, டாடாநகர், நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்கும் 41 வயதுக்கும் இ​டைப்பட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மீனவர்களை, துறைமுகப் பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X