2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் படையணி வெளியேற்றம்

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

ஆறு மாத கால தலைமைத்துவப் பசிற்சியை நிறைவு செய்து கொண்ட தேசிய இளைஞர் படை அணியைச் சேர்ந்த 22 மாணவர்கள் இன்று (16) வெளியேறினர். கிண்ணியா தேசிய இளைஞர் படையணி முகாமில் இருந்து வெளியேறுகின்ற ஏழுவது படையணி இதுவாகும்.

இவர்களுக்கான சான்றுதழ் வழங்கும் வைபவம் கிண்ணியா தேசிய இளைஞர் படையணி முகாமில் நிலையப் பொறுப்பதிகாரி கெப்டன் புஸ்மகுமார தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இந்தப் படையணியின் சிறப்பு வீரர்களாக யு.நிசாந்தி, ஏ.எச்.தில்சான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ் வைபவத்தில் அதிதிகளாக வடக்கு கிழக்க மாகாண தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் கேனல் ஆர் எம்.சிரான் ரணவீர,கிண்ணியா தள வைத்தியசாலையின் மாவட் வைத்திய அதிகாரி எச்.எம்.சமீம்,கிண்ணியா பிரதேச சமூர்த்தி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாப், கிண்ணியா ஜெம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஆரிப் உட்பட பலரும் பலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .