தீஷான் அஹமட் / 2018 மார்ச் 22 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, புல்மோட்டை நீர்தாங்கி வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க நபரொருவர், நேற்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் உடம்பில் அடிகாயங்கள் இருப்பதாகவும் அவரது இறந்த உடலுக்கு அருகிலிருந்து பொல், தடிகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரெனவும் இவரை யார் தாக்கினார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago