Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்
சர்வதேச உணவுத் திட்டத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு, மக்களுக்கான நிதி உதவி வழங்கல் தொடர்பான கலந்துரையாடல், தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இத்திட்டம், 25 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ, சேருவில, தம்பலகாமம், வெருகல் ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இத் திட்டத்தின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் பணம் வெஸ்டன் யுனியன் சேவை ஊடாக வழங்கப்படவுள்ளது.
இதில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், சமுர்த்தி பயனாளிகள், விசேட தேவையுடையோர்கள் போன்ற குழுக்களை வைத்து உள்ளடக்கப்பட்ட நிலையில் பயனாளிகள் பயன் பெறவுள்ளனர்.
குறித்த கொடுப்பனவானது ஓகஸ்ட், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் ஆகேிய மூன்று மாத காலத்துக்கு முதற் கட்டமாக வழங்கப்படவுள்ளது.
இதற்காக தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 2,432 பயனாளிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் சர்வதேச உணவு திட்டத்தின் (WFP) திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மரஞ்சனி கேதீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், பிரதம முகாமைத்துவ உதவியாளர் நிகாத் உட்பட வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
16 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
41 minute ago