2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

ஏ.சி வீதியின் புனரமைப்பு பணிகள் ஜனவரி ஆரம்பிக்கும்

Gavitha   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் அரபிக் கல்லூரி வீதியும் சந்தை வீதியும் இணைக்கு ஏ.சீ வீதியின் புனர் நிர்மாணப்பணிகள், எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமரையில் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டியுள்ள வீதிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் அனைத்தும் ல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடமும் திருகோணமலை நெடுஞ்சாலைகள் திணைக்களத் தலைவர் நிஹால் சூரியாராச்சி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த விதியை புனரமைத்து தருமாறு கோரி, நேற்று புதன்கிழமை (16) வரை போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .