Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில், எப்.முபாரக்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி போல் கோட்பெரி, திருகோணமலை மாவட்டத்துக்கான விஜயமொன்றை திங்கட்கிழமை(15) மேற்கொண்டதுடன், கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அஹமட்டை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடல் தொடர்பில், முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் தெரிவிக்கையில்,
'இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்திலுள்ள மீள்குடியேற்றம் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையினால் சொந்த இருப்பிடங்களை இழந்து வாழ்கின்ற மக்களின் மீள்குடியேற்றத்தை உடனடியாக நிவர்த்தி செய்து அவர்களுக்கான வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்து செல்வது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலைமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையை மாற்றி சமூகத்துக்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை உள்ளூராட்சி சபைகள் மூலம் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும் அதற்கான நிதியை எவ்வாறு திரட்டி இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் வாழ்வாதார இயல்பு நிலையை முனேற்றப் பாதைக்கு கொண்டுச் செல்வது தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதற்காக வேண்டி ஐரோப்பிய யூனியனும் முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி போல் கோட்பெரி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.லாகிர் மற்றும் ஏ.ஆர்.அன்வர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
07 Jun 2025