2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

ஐஸுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Janu   / 2024 ஜனவரி 11 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட  சோதனையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்  புதன்கிழமை  (10)  கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாறில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை , யுக்திய  திட்டத்திற்கமைய கிடைக்கப்பெற்ற தகவலின்படி  வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும்  கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அப்துல்சலாம் யாசீம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X