Janu / 2024 ஜூலை 17 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய், அக்போபுர கித்துள் ஊற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளது .
கந்தளாய் , கித்துள் ஊற்று பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கழகத்தினால், குறித்த வேன் , வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
கித்துல் ஊற்று பகுதியில் அதே இடத்தில் கடந்த பதினைந்து நாட்களில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அக்போபுர பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
எப்.முபாரக்

1 hours ago
3 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
16 Jan 2026