Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.எ.பரீத், பதுர்தீன் சியானா
கிண்ணியா நீதிமன்றக் கட்டடத்தை நிர்மாணிக்க பொருத்தமான காணியை அடையாளப்படுத்தினால் கட்டட நிர்மாணப் பணிகளை உடன் ஆரம்பிக்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்தார்.
கிண்ணியாவில் இயங்கி வந்த சுற்றுலா நீதிமன்றம் கடந்தகால பயங்கரவாதச் சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. நாட்டில் சுமூகநிலை ஏற்பட்டப் பின்னர் இதுபோன்று மூடப்பட்ட நீதிமன்றங்கள் மீளத் திறக்கப்பட்டன. எனினும்,கிண்ணியா நீதிமன்றம் மாத்திரம் இதுவரை மீளத் திறக்கப்படவில்லை.
,து தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சரிடம் எழுப்பிய வாய்மொழி மூல வினாவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிண்ணியா நீதிமன்றத்துக்காக புதிய கட்டடம் நிர்மாணிக்க ஏற்பாடுவுள்ளது. எனினும் இதற்குப் பொருத்தமானகாணி இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லை.
எனவே,காணியை அடையாளப்படுத்தினால் கட்டட நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பித்து நீதிமன்றத்தை மீளத் திறக்க முடியும் என நீதி அமைச்சர் இதன்போது பதிலளித்தார்.
விரைவில் பொருத்தமான காணியை வழங்குதற்கான முன்னெடுப்புகள் தற்போது இம்ரான் எம்.பியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago