2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

கௌரவிப்பு விழா

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

மருதம் கலைக்கூடல் மன்றம் ஏற்பாடு செய்துள்ள கௌரவிப்பு விழா எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணி தொடக்கம் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ்  எம்.எச்.ஏ.ஹலீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ ஜலீல் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதன்போது, ஊடகவியலாளர்களான ஏ.எல்.ஜுனைதீன், ஏ.எல்.எம்.முக்தார், பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.அஸ்ஹர், எம்.வை.அமீர் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .