2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கசிப்பு வைத்திருந்தவருக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜூன் 22 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

சட்ட விரோதமான முறையில் கால் லீற்றர் கசிப்பு  வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு இன்று 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

திருகோணமலை, தம்பலாகமம், 95ஆம் மைல் கல் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

தம்பலாகமம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை இன்று  கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை இன்று (22) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே  நீதவான் தம்பிக இவ்வாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .