2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கசிப்பு வைத்திருந்தவருக்கு பிணை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
இரண்டு லீற்றர்  கசிப்பு  வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிண்ணியா பைஸல் நகரைச் சேர்ந்த 45 வயதான நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், சனிக்கிழமை (12)  உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர், கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த நபரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போது, இவரிடமிருந்து குறித்தளவு கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .