Niroshini / 2016 மே 12 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் நீண்ட காலத்துக்குப் பின்பு கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய மழைபெய்வதால் கந்தளாய் பேராறு பிரதேசத்தில் இரண்டு மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு ஒரு பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பிரதேசத்தில் வீட்டு முற்றங்களில் உள்ள பெரிய மரங்களின் கிளைகளும் முறிந்துள்ளன. அத்தோடு கந்தளாய் பிரதேசத்தில் தற்போது வேளாண்மை நெல் விதைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல் விதைப்பு நடவடிக்கைகள் தாமதமடைவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
19 minute ago
26 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
30 minute ago
37 minute ago