2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

கந்தளாயில் இரத்ததான முகாம்

Mithuna   / 2024 ஜனவரி 21 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கந்தளாயில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் சனிக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் புதிய மதுரசா நகர் சமுக சேவை ஒன்றியம் மற்றும் அல்புருனி விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, கந்தளாய் அல் தாரிக் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

 இந்த இரத்ததான முகாமில் கந்தளாய் அல்தாரிக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர், யுவதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோகியோர் கலந்து கொண்டதோடு, இதன்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X