Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் பாடத்திட்டம் தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8.30 முதல் மாலை 4.30 மணிவரை தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தமிழ்மொழி மூல வணிகக் கல்வி கற்பிக்கும் சகல ஆசிரியர்களுக்கு நேற்று வியாழக்கிழமை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் தமிழ்மொழி மூலமான வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களை தவறாது கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago