Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, அடம்பன காட்டுப்பகுதியில் விறகு எடுகச்சென்ற இரண்டு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கரடித் தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்று (13) மதியம் 12.30 மணியளவில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரடித்தாக்குதலுக்கு உள்ளானவர்கள், கோமரங்கடவெல-அடம்பன பகுதியைச் சேர்ந்த ஜி.சுஜித் குமார (34 வயது) மற்றும் சீ.எச்.சனத் குமார (36 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக்குப் பின்னாலுள்ள காட்டுக்குள் விறகு சேகரிக்கச் சென்ற போதே, இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025