Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், அப்துல் சலாம் யாசிம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த
னவால் கிருமி தொற்று நீக்கி விசிறும் இயந்திரங்கள் 10, திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரேமானந்திடம் கையளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் நிதியுதவியில் பெறப்பட்ட இவ்வியந்திரங்கள் மூலம், கிருமித் தொற்று நீக்கி செயற்பாட்டை கிரமமாக மேற்கொள்ளக்கூடியதாக அமையும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.
கிருமிதொற்று விசிறும் இயந்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வில், மாவட்ட மேலதிகச் செயலாளர் எம்.ஏ.அனஸ், மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago