A.K.M. Ramzy / 2021 மே 17 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாணத்தில் கொரோனா காரணமாக இதுவரை 6336 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனவுக்கு 78பேர் பலியாகியுள்ளனர். கடந்த இருஅலைகளைவிட, இந்த மூன்றாவது அலையில் மரண விகிதம் படிப்படியாக அதிகரித்துவருகிறது.
இரண்டாம்அலையின்போது மொத்தமாக 25 என்றிருந்த மரணத் தொகை, மூன்றாவது அலையின்போது இரண்டு மடங்கையும் தாண்டி தற்போது 53ஆகி அதிகரித்துள்ளது. அதன்படி மொத்த பலியாயுனோர் தொகை 78 ஆக உயர்ந்துள்ளது.
மூன்றாவது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் 1291 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் 837 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 430 பேரும் , கல்முனைப் பிராந்தியத்தில் 73 பேரும் தொற்றுகுள்ளாகியுள்ளனர்.
இதன்படி கிழக்கில் திருமலை மாவட்டம் ஆபத்தான நிலையிலிருப்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்ட புள்ள விபரங்களிலிருந்து இதனை அறியமுடிகிறது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago