Editorial / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஏ.எம்.கீத்
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவில், நாளாம் கட்டை, சிங்கபுர, பகுதியில் 200 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர்கள் இருவர், நேற்று (16) மாலை திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதூர், ஆலீம் நகரைச் சேர்ந்த 26 வயதுக் குடும்பஸ்தர் ஒருவர் 50 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மூதூர், நெய்தல் நகரைச் சேர்ந்த 32 வயதுடைய குடும்பஸ்தர், ஓட்டோவொன்றில் வைத்து 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களுடன், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா , ஓட்டோ ஆகியனவும் திருகோணமலை தலைமையாகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
38 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
51 minute ago
56 minute ago