ஏ.எம்.ஏ.பரீத் / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள ரகுமானிய்யா நகர் வீதியில் கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில், 28 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரது வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில், 50 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தார்.
சந்தேகநபரும், இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவும், கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .